முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அவரை ஒரு அற்புதமான மனிதராகவும், பொருளாதார சீர்த்திருத்தத்தின் வல்லுநராகவும் புகழ்ந்து உருக்கமாக இரங்கல் தெரிவித்தார்.
மன்மோகன் சிங், இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் எனும் பெருமையை பெற்றவர். அவர் 2004 முதல் 2014 வரை பிரதமராகக் கடமையாற்றினார். பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்ட பெருமைக்குரியவர்களில் மன்மோகன் சிங் முக்கியமானவர். 1991-96 காலகட்டத்தில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக பணியாற்றிய காலத்தில், நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் முக்கியமான சீர்திருத்தங்களை அவரின் மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டது.
வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையின் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள விமான நிலையத்தில் மன்மோகன் சிங் மறைவின் தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறினார்:
“அவர் ஒரு அற்புதமான மனிதர். மிகப்பெரிய பொருளாதார சீர்த்திருத்தவாதி மற்றும் துறைசார்ந்த ஸ்டேட்ஸ்மேன். அவரின் மறைவு மிகுந்த இழப்பு. மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இந்த வெகுமக்கள் தலைவரின் நினைவுகள் நம் மனங்களில் என்றுமே நிலைத்து நிற்கும்.