டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள்.. விமான நிலைய வேலைகள்.. தமிழக அரசு வெளியிட்ட இரண்டு குட்நியூஸ்
வேலூர்: தமிழ்நாடு தாட்கோ சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதேபோல் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விமான நிலைய பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் சேருவதற்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 வயது முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் தாட்கோவால் வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்” இவ்வாறு கலெக்டர் சுப்புலெட்சுமி கூறினார். அதேபோல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விமான நிலைய பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
👉 விமான நிலைய பணிகள் குறித்த பயிற்சி விண்ணப்பிக்க
Also Read: Work From Home Jobs
Also Read: Tamilnadu Job Vacancy
Also Read: ரயில்வேயில் 4,232 பணியிடங்கள்! உங்களுக்கான பொன் வாய்ப்பு!