Thursday, April 17, 2025
No menu items!
HomeState Gov Jobsபோஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு போதும்! தேர்வே இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு!

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு போதும்! தேர்வே இல்லாமல் அரசு வேலை வாய்ப்பு!

மகிழ்ச்சியான செய்தி! இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க வேலைகளை எதிர்பார்த்திருக்கும் பலருக்கும் இது மிகுந்த நற்செய்தியாக இருக்கும். குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 2,000க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளதால், இதுவொரு சிறந்த வேலைவாய்ப்பு சந்தர்ப்பமாக இருக்கும்.

இந்த வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்பதைத்தவிர, கூடுதல் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது. தேர்வர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, விரைவாக விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

வயது வரம்பு மற்றும் தளர்வுகள்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்:
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
ஒபிசி பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு – 10 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்த மாநிலத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

🔹 பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குஇலவசம்
🔹 மற்றவர்கள் – ரூ.100
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதி – கடைசி நாள் எப்போது?

விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2025 என்பதால், விரைந்து விண்ணப்பிக்குங்கள்! இது ஒரு அரிய வாய்ப்பு, ஆதலால் தவறவிடாமல் உடனே செயல்படுங்கள்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்: https://indiapostgdsonline.gov.in/

இத்தகைய அரசு வேலைவாய்ப்புகளைப் பற்றிய புதிய அப்டேட்டுகள் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தைக் பின் தொடருங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments